Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரணத்தில் முடிந்த மதுபான விருந்து

மரணத்தில் முடிந்த மதுபான விருந்து

யாகொட பிரதேசத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இம்புல்கொட, இயல யாகொட, பெரக்கும் மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் தலை மற்றும் நெற்றியில் இரத்தக்கறை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொலையின் போது அவருடன் மது அருந்திய மற்ற மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles