Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி

ஊவா பரணகம – ஹாலிஎல பிரதேசத்தில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள முள்ளங்கி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தியிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles