Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன மாணவனின் சடலம் கரை ஒதுங்கியது

காணாமல் போன மாணவனின் சடலம் கரை ஒதுங்கியது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாடிக்கொண்டிருந்த 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று (16) மாலை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன மாணவர்களுள் ஒருவரான சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலம் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்றையை தினம் மாளிகைக்காடு- சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த குறித்த மாணவர்கள், கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வாறு இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles