Tuesday, January 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த பதவியை வகித்துள்ளமையினால் அதன் குறைபாடுகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்​கையில் நாட்டின் அரசியல் நிலைமை சிறந்த நிலையில் உள்ளது.
முழு நாடும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆகையால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பது எதிர்கட்சிகளுக்கு ஒரு பொறியாக இருக்கலாம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் நன்கு அறிவோம்.
இதேவேளை, எந்த தேர்தல் வந்தாலும் எங்களது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles