விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 126 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கைகளின்போது, 168 கிராம் ஹெரோயின், 93 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 925 கிராம் கஞ்சா, ஆயிரத்து 44 கஞ்சா செடிகள் மற்றும் 596 போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல சட்டவிரோத பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.