Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்தியர்கள் விடுதலை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்தியர்கள் விடுதலை

கத்தாரில் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளனர்.

கத்தார் நாட்டில் பணியாற்றிய முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

அந்நாட்டின் நீர்மூழ்க்கி கப்பல்கள் குறித்து அவர்கள் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் இதனை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் கடந்த 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர்கள் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles