ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.