Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை: 733 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: 733 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில், நாடளாவிய ரீதியில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் 144 சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 589 சந்தேக நபர்களில் 05 சந்தேக நபர்களும் 04 போதைக்கு அடிமையானவர்களும் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 08 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles