Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது‌செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிபான துன்ஹிடபதன காட்டு பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து தேடுதல் மேற்கொண்டது.

இதன்போது காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 780,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 6 பரல்கள் டங்கர ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பதுளை தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles