குருநாகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் குருநாகல் – ஹிந்தகொல்ல -கல்பொத்தவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சிறுவனின் தாய் வெளிநாடு சென்றிருந்ததாகவும், அவர் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து அவர் தவறி விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறுவன் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிந்துள்ளார்.
