Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சிக்கும் மஹிந்த குடும்பம்?

வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சிக்கும் மஹிந்த குடும்பம்?

மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தாரும் பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலரிமாளிகையில் தங்கி இருந்த அவரை அங்கிருந்து வெளியேறவிடாமல் மக்கள் இரவு முழுவதும் சுற்றிவளைத்திருந்தனர்.

இதன்போது ’10க்கும் மேற்பட்ட பெற்றோல் குண்டுகள் அலரிமாளிகைக்குள் வீசப்பட்டன’ என்று அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மஹிந்தவும் அவரது குடும்பத்தாரும் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர்கள் அநேகமாக அங்கிருந்து மத்தளை விமான நிலையம் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles