Friday, August 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 பேருக்கு மரண தண்டனை

7 பேருக்கு மரண தண்டனை

3 மீனவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதுடன், சந்தேக நபரான பெண்ணொருவர் விடுதலை செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இலங்கை கடற்பரப்பில் மீனவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்களை ஏற்றிக் கொண்ட தேஜான் படகை கடத்தி, அதிலிருந்த 3 பேரை கொலை செய்து, ஏனையவர்களை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கு நடைபெற்ற காலப்பகுதியில் சந்தேக நபர்களில் மூவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், ஏனைய 8 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles