Monday, August 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால தேசிய பூங்காவில் சுற்றிவளைப்பு: 220 கிலோ கஞ்சா மீட்பு

யால தேசிய பூங்காவில் சுற்றிவளைப்பு: 220 கிலோ கஞ்சா மீட்பு

யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 220 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் புத்தல, கோனகங்ஆர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் இராணுவ சிங்கப் படையணி அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது, ​​சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோனகங்ஆர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles