Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு80,000க்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு

80,000க்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்தாததால் இவ்வாறு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 63,150 உள்நாட்டு பாவனையாளர்களும், 17,820 வீட்டு உபயோகமற்ற பாவனையாளர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பாவனையாளர்களிடமிருந்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, 1,909 மில்லியன் ரூபா கட்டணமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறப்படுகிறது.

அதற்கமைய, நீர் வழங்கல் சபைக்கு வைத்தியசாலைகளில் இருந்து 182 மில்லியன் ரூபாவும், பாடசாலைகளிலிருந்து 175 மில்லியன் ரூபாவும், இராணுவம் மற்றும் பொலிஸாரிடமிருந்து 116 மில்லியன் ரூபா வசூலிக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று எதிர்கால கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles