Thursday, November 27, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி மரணம்

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி மரணம்

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் குறித்த மாணவிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் அவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles