Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு வாரங்களில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவு

இரு வாரங்களில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தின் (2024) முதல் 13 நாட்களுக்குள், 10 மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தொகை 1800 ஆகும்.

வட மாகாணத்தில் 1194 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை (16) வெளியிடப்படலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles