Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இருவருக்குமிடையில் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் மஹரச்சிமுல்ல, துன்தெனிய காலனி பகுதியைச் சேர்ந்த லியனவடுகே சுமேத கிரிஷான் லியனகே என்ற 42 வயதுடையவர் என போயவலான பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (14) பிற்பகல் போயவலான, ஹெந்துவாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்களில் கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரும், கொலையைச் செய்த நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 750 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 9ஆம் திகதி போயவலான பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

கொலையுண்டவர் தான் கைது செய்ய துப்பு கொடுத்தவர் என சந்தேக நபர் நினைத்துள்ளார்.

நேற்று (14) பிற்பகல் குறித்த நபர் தனது சகோதரருடன் பயணித்த நிலையில் சந்தேக நபர் அவரை வழியில் சந்தித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேகநபர் கத்திக்குத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் தற்போது தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த கொலைச் சந்தேகநபர் அலவ்வ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போயவலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles