ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபத் ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வயது வரம்பு இரண்டு வருடங்களாக இருந்தது.
சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கு காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.