மின்சார பாவனையாளர்களுக்கு நல்லதொரு நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இன்று (12) காலை ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனைகள் இன்று (12) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.