Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்துவின் நியமனத்துக்கு எதிராக மனு தாக்கல்

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிராக மனு தாக்கல்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சபையின் மூலமாக வழங்குவதைத் தடுக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பல அரச அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் தீவிர அலட்சியம் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர் ஹர்ஷன நாணயக்கார, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட இலங்கை பொலிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தார்.

பொலிஸ் அதிகாரம் மற்றும் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்திய தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடலில் நிராயுதபாணிகளாக இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைத் தடுக்கத் தவறியதாக மனுதாரர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles