Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த பயணிகள் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கப்பலில் ஒரு பயணிக்கு 26,000 ரூபா வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, அடுத்த மாதம் முதலாம் திகதி காலை 08.00 மணிக்கு இந்தியாவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிவகங்கை பயணிகள் கப்பல், அன்றைய தினம் முற்பகல் 11.45 மணியளவில் காங்கேசந்துறையை சென்றடையவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles