Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)

வட மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று முற்பகல் 9 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து, அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே, மக்கள் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கு” என கோஷம் எழுப்பி, வைத்தியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என சகலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles