Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதன்படி 346,976 பரீட்சார்த்திகள் இன்றைய தினம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles