இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் இன்று (29) மாரவில, மோதரவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விபத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றுமொரு வாகனத்தில் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.