Thursday, May 22, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டு சிறுவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்

இரண்டு சிறுவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்

குழந்தைகள் மத்தியில் கொவிட் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த சில நாட்களில் இரண்டு குழந்தைகள் கொவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சளி போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால், முகமூடி அணிவது போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

சமீப நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக்குழாய் சம்பந்தமான பல நோய்கள் பரவி வருவதாகவும் வைரஸ் நோய்களே பிரதானமாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், டெங்கு மற்றும் சிறுவயதில் காசநோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பொதுவாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles