2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (29) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.
இதன்படிஇ பரீட்சை தொடர்பான யூகப் பத்திரங்களை வழங்குவது மற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர் தரப் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது.