Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை பேராசிரியர்கள் 800 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

பல்கலை பேராசிரியர்கள் 800 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

2023 ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக பல்கலைக்கழக கற்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் சுமார் 6200 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles