பத்தரமுல்லை – தியத்தன உயன பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது சற்றுமுன்னர் காவல்துறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் காவல்துறையினரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது, காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அந்த பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.