நெலுவ பகுதியில் இருந்து லங்காகம நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று குறித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.