Wednesday, June 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு12 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞர் கைது

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞர் கைது

தனது உறவினரான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இரண்டு வருடங்களாக தனது உறவினரான 12 வயது சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காணும் வகையில் இலங்கை பொலிஸாருக்கு கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய முறையின் மூலம் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

கூகுள் வழங்கிய தொடர்புடைய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீடியோவில் பதிவாக்கி கூகுள் ட்ரைவில் பதிவேற்றம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles