Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் நால்வர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் நால்வர் கைது

வரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இன்று (19) அதிகாலை நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்து சட்டவிரோதமாக இவ்வாறு இலங்கைக்கு பொருட்களை கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பொருட்கள் தொடர்பில் பிரதேச புலனாய்வு தகவல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பல்வேறு வகையான மடிக்கணினிகள், ஐபோன்கள், பல்வேறு கைப்பேசிகள், கைப்பேசிகள் பாகங்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள், நகைகள், பல்வேறு வகையான விஸ்கி, வாசனை திரவியங்கள் மற்றும் கார் உதிரி பாகங்கள் ஆகியவை அடங்கும்.

இவர்கள் நால்வரும் களனி, வீரகட்டிய, புத்தளம், கொலன்னாவ பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்பதுடன், இவர்களது பொருளாதாரப் பின்னணியைக் கண்டறிந்து எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நான்கு பேரும் இந்த பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles