Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு ஜனவரியில்

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு ஜனவரியில்

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆம் மற்றும் 2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிப் பரீட்சை மேற்படி தினங்களில் நடத்தப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles