Tuesday, June 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றிவளைப்பு: 2,121 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு: 2,121 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் 2,121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோகிராம் கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ சாம்பல், 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 2,121 சந்தேக நபர்களில், 12 பேர் தடுப்பு உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர். அவர்களில் 116 பேர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் IRC பட்டியலில் உள்ளனர்.

மேலும், 5 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles