Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் வனஜீவராசி அதிகாரிகள்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் வனஜீவராசி அதிகாரிகள்

நாடளாவிய ரீதியில் வனஜீவராசி அதிகாரிகள் எதிர்வரும் 18ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய வனஜீவராசி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வனஜீவராசி அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வனஜீவராசி அதிகாரிகளின் சேவையை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

பணியில் இருந்த 85 வனஜீவராசி உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 23 பேர் யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles