Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் கைது

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 61 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஹோமாகம, கினிகத்தேனை, கம்பளை, வேயங்கொடை, கந்தானை மற்றும் இரத்தினபுரி ஆகிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் உத்தியோகப்பூர்வ முத்திரைகள் சந்தேகநபரிடம் இருந்து இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles