மொனராகலை – திக்தலாவ பிரதேசத்தில் மரம்முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகன் வெட்டிக் கொண்டிருந்த மரம் முறிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை திக்தலாவ நெல்லிகெலே வீதியைச் சேர்ந்த 75 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் வீட்டுக்கு அருகில் உள்ள பலா மரத்தை வெட்டிக் கொண்டிருந்த போது, முறிந்து விழுந்த பலா மரத்தின் கிளை தந்தையின் தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.