108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் காலனித்துவ அதிகாரிகளால் அரசாங்கத்திற்கு எதிரான கலவரம் மற்றும் தேசத்துரோகத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

