கொழும்பின் பல பகுதிகளில் நாளை (09) மாலை 5 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (09) மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(10) காலை 9.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.