Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்து விபத்து: இருவர் காயம்

புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்து விபத்து: இருவர் காயம்

புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

செபஸ்தியார் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதி ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது.

இந்த நிலையில், குறித்த பாலம் 2019ம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக சுமார் 11 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தொழிலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாலம் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது இடம்பெற்ற இந்த சம்பவம், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் போது இடம் பெற்றிருந்தால், பாரிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles