Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

அடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடு. எரிபொருளில் சிக்கல் ஏற்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது – என்றும் அவர் இதன்போது கூறினார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles