Friday, October 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

பாலியல் இலஞ்சம் பெற முயன்ற சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(5) ஆஜர்படுத்திய போது ​​அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் முறைப்பாட்டாளரான பெண்ணை சந்திக்க சென்ற போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles