Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்தாயின் சடலத்துடன் பாலுறவு - மகன் கைது

தாயின் சடலத்துடன் பாலுறவு – மகன் கைது

தாயின் சடலத்துடன் உடலுறவு கொண்ட ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

22 வயதுடைய நபர் ஒருவரை இந்தூர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரின் 70 வயதுடைய தாயார் நுரையீரல் கோளாறு காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பின்னர், குறித்த பெண்ணின் மகன் (22) அவரது சடலத்தை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்று சடலத்தை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தெருவில் வைத்து கடந்த இரு நாட்களாக உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அப்போது, குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 297 (எந்த மனித சடலத்தையும் மதிக்காதது) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏதேனும் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles