Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலெக்ஸ் மரணம்: மேலும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணை

அலெக்ஸ் மரணம்: மேலும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணை

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இன்று (05) மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மரண சாட்சி விசாரணை நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது நாகராஜா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் நேற்று(04) உத்தரவிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles