Saturday, April 25, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்

தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிய ரக வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles