களனிப் பல்கலைக்கழகத்தின் கற்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய கல்வி நடவடிக்கைகள் இன்று (04) பிற்பகல் 2.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் என களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து மாணவர்களும் நாளை (05) அதிகாலை 5:00 மணிக்கு முன்னதாக தங்கும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று உரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை, களனிப் பல்கலைக்கழகத்தின் வளாகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து உள்ளக மற்றும் வெளி விடுதிகள் உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.