Monday, September 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது

படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் மன்னார் கடல்பரப்பில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 12 பேரும், திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களில், 5 சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க, கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles