தேங்கி கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கடந்த திங்கட்கிழமை கிடைத்துள்ளது.
அதன்படி இந்த வாரத்தில் இருந்து அச்சிடல் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
சட்டவிரோதமான முறையில் பணத்துக்காக சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்படுவது குறித்து முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன, அது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.