Sunday, June 8, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோ சிஐடியில் முன்னிலை

ஜெரொம் பெர்னாண்டோ சிஐடியில் முன்னிலை

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ இன்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட பின்னர், சிங்கப்பூர் சென்ற அவர் நேற்று (29) அதிகாலை நாடு திரும்பினார்.

ஜெரொம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்தது.

அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அவர் நாடு திரும்பிய 48 மணித்தியாலங்களில் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles