பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை – வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பேருந்து சாலையை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்துள்ளனர்.
இது தனியார் அரிசி ஆலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந:து என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு குழுவினர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.



