நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச்கள் பழுதடைந்துள்ளதால், மருந்து வழங்கல் துறையால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
சில சிரிஞ்ச்களில் நீராவி மற்றும் பல்வேறு வகையான எண்ணெய் கலப்பதாக புகார் எழுந்ததால், மருத்துவ வழங்கல் துறை இந்த சிரிஞ்ச் டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதன்படி, மருத்துவ வழங்கல் பிரிவில் 10 மில்லி மற்றும் 20 மில்லி சிரிஞ்ச் இருப்பு இல்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் தற்போது வைத்தியசாலைகளில் 5 மில்லி மீற்றர் அளவுடைய சிறிய சிரிஞ்ச்கள் கையிருப்பு உள்ளதாகவும், இந்த சிறிய சிரிஞ்ச்களின் பாவனை அதிகரித்துள்ளமையினால் அடுத்த மாதத்தில் கையிருப்பு சிரிஞ்ச்கள் தீர்ந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.